சென்னையிலிருந்து,
சொந்த ஊருக்கு வந்து வீட்டில்
வந்து வரும் போது, ஒரு
வித மன அமைதி ஏற்படும்.
அது மன அமைதி என்பதை
மனகளிப்பின் உச்ச பட்ச நிலை
என்று கூட கூறலாம்.
இந்த மனகளிப்பிற்கு, சொந்த ஊருக்கு வந்தோம்
என்பது ஒரு காரணமாக இருந்தாலும்,
அதனை தாண்டிய இன்னொரு காரணமும்
இருந்தது!!!! சென்னை மண்ணின் இரைச்சலை
தாண்டி, கிராமத்தின் இரைச்சல் இல்லாத சுற்றுபுற சூழ்நிலை
தான்!!!! மற்றவருக்கு ஆச்சரியமாக கூட இருக்கலாம்!!! அதன்
களிப்பை உணர்ந்த தருணங்கள் பல
உண்டு
சென்னையில்
நான் தங்கியிருந்த பகுதிகள், புறநகர் பகுதிகளாக இருந்தாலும்,
காதில் வந்து சேரும் இரைச்சலை,
மன அமைதியை வேரரப்பதாகவே அமைந்தது
என்றால் மிகையில்லை!!!
மிக சமீபத்தில் சென்ற நிகழ்வில், ஒலி
அளவு அதிகமாகி, காதில் ஏற்பட்ட இரைச்சல்
இன்னும் குறையவில்லை.
கிராமங்களில்
நடக்கும் சுப காரியங்களில், வைக்கப்படும்
ஒலிபெருக்கிகளில், இயல்பாகவே ஒலி அளவு அதிகமாகவே
இருக்கும்.
சாதாரணமாகவே
காற்று, மண், நீர் மாசுபாடு
குறித்த விழிப்புணர்வே இல்லாத நமக்கு, ஒலி
மாசுபாடு குறித்த விழிப்புணர்வு இருக்கவே
வாய்ப்பு இல்லை!!!
கேட்கும்
திறன் குறைதல், மன அழுத்தம், தலைவலி,
இரத்த அழுத்தம் அதிகமாதல், இதய நோய்கள் போன்றவை
உண்டாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மருத்துவ
உலகம் சொல்லுகிறது.
நகர எல்லைக்குள் எர் ஹரான் ஒலிப்பதை
தவிர்க்கவும் என்ற விளம்பர பலகை
என்றாவது கவனித்திருப்போமா!!?!?!? பொது நிகழ்வுகளில்/இடங்களில்,
ஒலி அளவுகள் குறித்த விழிப்புணர்வு
நமக்கு இருப்பதில்லை.
“ அடுத்தவன்
மூக்கினை தொடும் வரை, நம்முடைய
தனி மனித சுதந்திரம்!? “ என்ற
திரைப்பட வரி தான் வந்து
செல்கிறது. நம்முடைய தனி மனித சுதந்திரத்தை
பற்றி பேசுவர்கள், அடுத்தவரின் சுதந்திரத்தை பறிப்பது ஏனோ!?!?
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment