Saturday, February 24, 2018

அறிவை பெறுதலும் சமூக அங்கிகாரமும்


மனிதன் புரிந்து கொள்வதில் உள்ள பிரச்சனைகள் ஏராளம். அதன் ஏற்று கொள்வதில் பிரச்சனைகள் உண்டு.

A என்ற மனிதருக்கும் நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கிறது என்று வைத்து கொள்வோம். B என்ற மனிதருக்கும் விஷயங்கள் தெரியவில்லை என்று வைத்து கொள்வோம்.

அதில் B என்பவர், தகவல் பெற வாய்ப்பில்லாமலும் இருக்க்லாம். அல்லது தகவல் பெற வாய்ப்பிருந்து, கற்று கொள்ளமல் இருக்கலாம்.

மேற்கண்ட கூற்றினால், A மனிதர் புத்திசாலி, திறமையானவன் என்ற புகழ ஆரம்பித்து விடுகிறோம். இது உண்மையா?? என்பதை சற்று சிந்திக்க வேண்டியுள்ளது.

அறிவினை பெறாதவன் இருப்பதால் தான், அறிவை பெற்றவன் என்று ஒருவனே தோன்றுகிறான். இருவரை ஒப்பிட்டு திறமையை அங்கிகாரம் செய்கிறோம்.

ஒவ்வொரு மனிதரும் ,இயல்பாக தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள் ஏராளம். அவ்வாறாக, ஒருவனின் கடமையை புகழ்/அறிவாளி என்ற நிலைக்கு உயர்த்தி விடுகிறோம்.....

திறமைகளை அங்கிகாரம் செய்வதில் எவ்வளவே பிரச்சனைகள் உள்ளது!!! திறமைகளை வெளி கொணர்வதில், அதை விட அதிக பிரச்சனைகள் உள்ளது.

நான் கெட்டவன் என்பதற்காக, அடுத்தவனை நல்லவனாக அங்கிகாரிக்க முடியுமா என்ன????

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment