Tuesday, October 31, 2017

பொருளாதார அறிவும், எனது புரிதலும்


இளநிலை சித்த மருத்துவம் பயின்று கொண்டிருந்த நேரம்!!! நண்பர் ஒருவர், பங்கு சந்தையில் முதலீடு செய்திருப்பதாக கூறினார். “ ஏன் தேவையில்லாமல், பணத்தை வேஸ்ட் பண்ற.. பணத்தை எடுத்துடுஎன்று அறிவுரை கூறினேன். அந்த தருணத்தில், எனக்கு பொருளாதாரத்தை பற்றியே பங்கு சந்தையை பற்றியே அரிச்சுவடி கூட தெரியாது. ஆனால், பொதுபுத்தியில் உள்ள கருத்தின் அடிப்படையில், அப்படி கூறினேன்.

காலங்கள் கடந்து செல்லுகையில், பங்கு சந்தை பற்றி நன்கு தெரிந்த நண்பர் ஒருவர் அறிமுகமானார். அவரிடமிருந்து பங்கு சந்தையின் அரிச்சுவடியை பற்றி கற்று கொண்டேன்.

கொஞ்சம் கற்று கொண்ட ஆர்வ கோளாறில், சிறியளவு மூதலீடு செய்ந்திருந்தேன். சிறியளவு லாபம் பார்த்திருக்கிறேன். அதே மாதிரி, பெரியளவிற்கு இழந்திருக்கிறேன்!!! பங்கு சந்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல், முதலீடு செய்ததால் ஏற்பட்ட பின்விளைவுகள்!!!

அதற்கு பிறகு, TNPSC Group I தேர்விற்காக படிக்க ஆரம்பித்த பிறகு, பொருளாதாரத்தை பற்றிய அடிப்படையை தெரிந்து கொண்டேன். இப்போது TNPSC இலவச பயிற்சி வகுப்புகள் எடுப்பதால், என்னுடைய பொருளாதாரம் சார்ந்த அறிவை, இன்னும் மேம்படுத்தி கொண்டிருக்கிறேன்!!!

இன்று!! அதே நண்பரை பார்த்திருந்தால், “ பங்கு சந்தையில் மூதலீடு செய்வதில் தவறில்லை, அதன் ஏற்ற இறக்கங்களை தெரிந்து கொண்டு, பிறகு முதலீடு செய்யுங்கள்என்று அறிவுரையை மாற்றி சொல்லி யிருப்பேன்.

நிற்க!!! இதெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால்……

இன்றைய நிலையில், பொருளாதாரத்தை பற்றிய அடிப்படையே தெரியாமல், பொருளாதார மேதைகளாக, முகநூலில் கம்பு சுத்துகிறவர்களை பார்க்கும் போது, புன்னைகை தவிர, வேறொன்றும் தோன்றுவதில்லை!!!

நானும் பத்தாண்டுகளுக்கு முன்பு, இதே மனநிலையில் இருந்தேன். ஆனால், சிறிதளவு அடிப்படையை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்!! அதை நீங்களும் செய்யலாமே!!!

பொருளாதாரம் என்னுடைய துறை இல்லையென்றால், பொருளாதார அறிவை பற்றிய தாகம் இன்னும் குறையவில்லை.

இங்குள்ள அனைத்து பிரச்சனைகளைகளுக்கும், பொருளாதாரத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாமல், முதற்காரணத்தை புரிந்து கொள்ள இயலாது. அந்த அடிப்படையை, புரிந்து கொள்ள முயலுங்கள்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment