Saturday, October 14, 2017

மாற்று மருவத்தில், அறிவியல் ஆய்வில் உள்ள பிரச்சனைகள்


மாற்று மருத்துவமும், அறிவியல் உட்பட்டதே. அதில் மாற்று கருத்தில்லை!!! ஆனால் ஆராய்ச்சி செய்கையில் உள்ள நடைமுறை இடர்பாடுகளை, எந்த அளவிற்கு உள்வாங்கி இருக்கிறோம் என்பதே பிரச்சனை!!!!

ஆராய்ச்சிக்கு முதற் தேவை பணபலம்!!! இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆராய்ச்சி துறைக்கு ஒதுக்கப்படும் பணத்தின் அளவு குறைவு!! இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8% மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

https://en.wikipedia.org/…/List_of_countries_by_research_an…

https://thewire.in/105887/research-budget-biotech-iiser/

அதில் மருத்துவ துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில், இந்திய மருத்துவ துறைக்கு ஒதுக்கப்படும் நிதி என்பது மிகவும் குறைந்த அளவே!!!

http://indiabudget.nic.in/ub2017-18/eb/sbe5.pdf

வெளிநாடுகளில், தனியார் மருந்து கம்பெனிகளின் மூலமாக, அதிகளவு ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த இடத்தில் தான், மருத்துவ வணிகம் தொடங்குகிறது.
ஆராய்ச்சியை யார் முன்னெடுப்பது என்பதே மிக முக்கியமான கேள்வி????
-------------------------------------------------------------------------------------------------------------------
எந்தவொரு ஆராய்ச்சியும், அத்துறையை சார்ந்தவர்களால் மட்டுமே செய்ய முடியாது. அத்துறையை தாண்டி, மற்ற துறையினரின் பங்கும் முக்கியம்!!! கூட்டு முயற்சியாகவே இருக்க வேண்டும்!!

இந்திய மருத்துவ முறையை பொறுத்த வரை, biochemist, pharmacognist, microbiologist, pathologist, epidemiologist போன்ற பல்துறை ஆய்வர்களின் பங்கு மிக முக்கியமாகிறது. இதற்கு எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள் என்பது கேள்வி???

நான் சித்த மருத்துவத்தை பயின்றவன் என்பதால், நான் பெற்ற அறிவை வைத்து, நோயாளிகளுக்கு மருத்துவ வழிமுறைகளை மட்டுமே அளிக்க இயலும்!!!

நவீன மருத்துவத்தில், உள்ள பல்வேறு மருந்துகளின் கண்டுபிடிப்பில் pharmacognist பங்கு மிக அதிகம்!!! அதே சமயத்தில், மருத்துவர்களின் பங்கு குறைவு!!!

இதை எப்போது நாம் புரிந்து கொண்டோம்????
----------------------------------------------------------------------------------------------------------
இந்திய மருத்துவ முறைகளில் நடைபெறும் ஆராய்ச்சிகளை கேட்கும் போது, இந்தியாவில் நடக்கும் மருத்துவ துறை ஆராய்ச்சிகளோடு ஒப்பிடுவது அவசியமாகிறது. இது தவறாக தர்க்கமாக கூட இருக்கலாம்; வேறு வழியில்லை.

பெரும்பாலான ஆராய்ச்சிகள், வெளிநாடுகளில் நடைபெறுவது. அதை வைத்து கொண்டு விவாதம் செய்து கொண்டிருக்கிறோம்!!! இந்தியாவிற்குள் நடக்கும் ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை மிக குறைவு!!!

http://www.hindustantimes.com/…/story-0nI4mqHaMAVwIsarbDz1k…

அப்படியான உண்மையான நிலையில், இந்திய மருத்துவ முறைகளிடமிருந்து மட்டும், அதிகப்படியான ஆராய்ச்சிகள் பார்ப்பது எங்ஙனம்????
-----------------------------------------------------------------------------------------------------------
நவீன மருத்துவத்தில், ஒரு மருத்துவ மூலக்கூறினை ஆய்வு செய்து, சந்தைப்படுத்துவதற்கு குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் எடுத்து கொள்ளும்!! அதை தாண்டி post marketing surveillance என்னும் நான்காம் நிலை, ஆராய்ச்சி எப்போது முடியும் என்பது கணிக்க இயலாது.

அப்படியிருக்கையில், பராம்பரிய மருந்துகள் பெரும்பாலும், கூட்டு மருந்துகளே!!! அப்படியான பல்வேறு மருந்துகளின் கூட்டு ஆய்வை முடிப்பதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமோ???

மேலும் இந்த ஆராய்ச்சிகளை முன்னெடுக்க யார் தயாராக இருக்கிறார்??? அதற்கு பணமளிக்க யார் தயராக இருக்கிறார்கள்??? தனியார் மருந்து கம்பெனி முன்வராது. ஏனெனில் மருந்திற்கு காப்புரிமை பெற்று லாபம் சாம்பதிக்க இயலாது.

பராம்பரிய மருந்துகளில் நடைபெறும் ஆராய்ச்சி என்பது, Reverse pharmacology வகையை சார்ந்தவை. அதாவது அனுபவ முறையில் சிறந்த மருந்துகளை, ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது.

இதையெல்லாம் புரிந்து கொள்ள, யாரும் தயாராக இல்லை என்பதே கள யதார்த்தம்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment