Thursday, September 7, 2017

இடையில் தொய்வு ஏன்???


       மருத்துவ தேர்வு வாரியம் அறிவித்த, உதவி மருத்துவ அலுவலர் தேர்வுக்கு, இன்னும் ஒரு மாதமே மீதமுள்ளது. தேர்வு அறிவித்த நாளிலிருந்து கணக்கிட்டால், 40 நாட்களை கடந்து விட்டோம். பாதி கிணற்றை தாண்டி விட்டோம்!!! மீதியை எப்படி தாண்டுவது??

தேர்வு அறிவிப்பு வெளிவந்தவுடன், தன்னம்பிக்கை மிகுந்து படிக்க ஆரம்பித்து இருப்பீர்கள்!!! ஆனால், காலங்கள் கடந்து செல்ல செல்ல, தன்னம்பிக்கை வெகுவாக குறைந்து, பூஜ்ய நிலையை உணர்ந்திருக்க வாய்ப்புகள் அதிகம்!!! அனைவருக்கும் இம்மனநிலை வந்திருக்காது. ஆனால் மூன்றில் இருவர், இம்மனநிலைக்கு வந்திருப்பீர்கள்!!!

அதிலும் குடும்ப வாழ்க்கையில் இணைந்தவர்கள், பொருளாதாரத்திற்காக வேறொரு பணியில் இருப்பவர்கள், இளமை வயதை கடந்தவர்களுக்கு, எளிதாக நம்பிக்கை இழந்து விட வாய்ப்புகள் அதிகம்!!! மாறாக, கல்லூரிகளில் தங்கி படிப்பவர்கள், முதுகலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு, இம்மனநிலை வர வாய்ப்புகள் குறைவு!!!

இத்தகைய மனநிலை, நம்முடைய தேர்வுக்கு மட்டுமல்ல!!! ஒட்டு மொத்த போட்டி தேர்வாளர்கள் அனைவருக்குமான மனநிலை!!! மற்ற தேர்வாளர்களுக்கு வெவ்வேறு தேர்வுகள் இருக்கும். ஆனால், அரசு மருத்துவராக பணிபுரிய ஆசை பூண்டால், இதை விட்டால் வேறு வழியும் இல்லை!!!! எதிர்காலத்தில் வரும் அடுத்த தேர்வை நோக்குவதை விட, இன்றைய தேர்வை மட்டும் நம்புவோம்!!!

இம்மனச்சோர்விற்கு ஆயிரம் காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்!!!

முதலில் நம்முடைய பாடங்களை சொல்லலாம். நிறைய தரவுகள் மானப்பாடம் செய்யும் முறையிலே உள்ளது. மேலும் எளிதாக உணர்ந்து கொள்ளும் வகையான தரவுகளையும், நாம் மனப்பாடம் செய்தே பழகி விட்டோம்!!!! நம்முடைய பாட நூல்களை பலமுறை படித்திருப்போம்!!! மேலும் மேலும் அதையே படிக்கும் போது, அதன் மீதான வெறுப்பு எளிதாக தொற்றி கொள்ளும்!!!! நமக்கு பிடித்த திரை இசை பாடலாக இருந்தாலும், தொடர்ந்து கேட்கும் போது, அதன் மீது வெறுப்பு வந்து விடும் அல்லவா???

அடுத்தது….. படிக்கும் முறை- நாம் பெரும்பாலும், மனப்பாடம் செய்தே பழகி விட்டோம்!!!! பாடங்களை புரிந்து கொண்டு, படிக்க வேண்டும் என்று எண்ணியதே இல்லை!!! மானப்பாடம் செய்வதையே திறமையானவன் என்ற புரிதலும், சமூகத்தின் அழமாய் பதிந்துள்ளது!!!! பல்கலை கழக தேர்வுகளுக்கும் படிக்கும் முறையும், போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் முறையும் வெவ்வேறானவை!!! இரண்டும் ஒன்றே என்ற புரிதல் அபத்தமானவை!!!!

அடுத்ததாக படித்து விட்டு, புத்தகத்தை திருப்பி பார்க்கையில், படித்தவைகள் அனைத்தும் மறந்து விடுதல்!!!! மாதிரி தேர்வுகள் எழுதும் போது, மதிப்பெண் குறைதல்!!!!

மறப்பது மனித இயல்பு, அதிலும் பாட புத்தகங்களை படித்து நினைவில் வைத்து கொள்வதென்றால் எளிதான என்ன???? ஒரு புத்தகத்தை படித்து விட்டு, மூன்று நாட்களில் திருப்பி பார்க்கையில், 30-50 சதவீதம் மட்டுமே நினைவில் இருக்கும் என்பது உளவியல் கூறும் உண்மை. அதிலும் ஒரு வாரம் கழித்தால், 10 சதவீதம் மட்டுமே நினைவில் நிற்கும். தேர்வு நாளன்று காலையில், புத்தகங்கள் அனைத்தும் வெறுமையாக இருப்பது போன்று தோன்றும்!!! ஆனால், தேர்வு அறைக்கு சென்றதும், அனைத்தும் நினைவுக்கு வரும்!!! பதற்றம் அடையாமல் இருந்தால்!!!

இது உங்களுக்கு மட்டுமான பிரச்சனையாக கொள்ள வேண்டியதில்லை. ஒட்டு மொத்த சமூகத்தில் உள்ள அனைத்தும் தேர்வாளர்களுக்கு உள்ள பிரச்சனை!!!! அதை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம்!!! இப்படி குழப்பி கொள்ளாமல் இருந்தாலே, மாதிரி தேர்வுகளை எளிதாக கடக்க இயலும்!!! மேலும் மாதிரி தேர்வுகளில் வரும் வினாக்களே, உண்மையான தேர்வில் வர வேண்டும் என்று அவசியமில்லை!!!!

அடுத்தது…. தனிநபர் பிரச்சனைகள் ஏராளம். குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு, குழந்தைகள், பொருளாதாரம், கணவன் மனைவி, வீட்டு பிரச்சனைகள் என ஏற்கனவே பல பிரச்சனைகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். இதனால் உண்டாகும் கவன சிதறல், தன்னம்பிக்கை குறைக்க செய்யும்!!! பணிக்கு செல்பவர்களுக்கு இதே மனநிலை தான்!!!

அதுபோல்…. முதுகலை படிப்பவர்கள் மற்றும் சமீபத்தில் படித்த முடித்தவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுவார்கள் என்றும் எண்ண வேண்டாம்!!! கடந்த தேர்வில் சரிபாதியாக தேர்ச்சி பெற்றவர்கள், பட்ட படிப்பு முடித்து சில காலம் கடந்தவர்களே!!!

இவைகள் களைவது என்பது சற்று சவலான காரியம்!!! இது தேர்வுக்கு மட்டுமல்ல!!! வாழ்க்கையின் அனைத்தும் இடங்களில் வரும்!!! முக்கியமான மண வாழ்க்கையில்!!!

ஒன்று. ஏற்கனவே உள்ள பிரச்சனைகளை களைய முற்படுவது. மற்றொன்று. வேறொன்றை வைத்து, தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது!!!!

ஏற்கனவே சொன்ன இரண்டு விஷயங்களை தான் திரும்ப சொல்ல போகிறேன். ஒன்று. எதிர்கால கிடைக்கும் போகும், சம்பளம், மரியாதை, அங்கிகாரம் ஆகியவற்றை மனதில் நிறுத்தினால், தன்னம்பிக்கை கிடைக்கும்!!!! மற்றொன்று. சக போட்டியாளர்களின் மீதான பொறாமை குணம்( இது தவறான எண்ணமே. வேறு வழியில்லையே)!!!

நீங்க எளிதாக சொல்லிட்டு போய் விடுவீங்க!!!! படிக்கிற எங்களுக்கு தானே தெரியும்!!! அறிவுரை சொல்வது எளிது!!! அதை கடைபிடிப்பது எவ்வளவு கடினம் என்பதை நன்கறிவேன்!!! முயற்சிக்கு பாருங்கள்!!! முயன்றால் முடியாதது எதுவுமில்லை!!!!

சில அறிஞர்களின் பொன்மொழிகள்

/////இந்த நிமிடத்தில் வாழ்க்கை எவ்வளவு கடினமாக வேண்டுமானாலும் தெரியலாம். ஆனால், செய்வதற்கும் வெல்வதற்கும் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒன்று இருந்துகொண்டேதான் இருக்கிறது.-- ஸ்டீபன் ஹாக்கிங்///////

///////இந்த நொடியில் உங்களது 100 சதவிகிதத்தையும் கொடுத்து உழைப்பது, அடுத்த நொடியின் வெற்றியையும் சந்தோஷத்தையும் உறுதி செய்துவிடுகிறது.---- ஒப்ரா வின்ஃபிரே/////

அப்புறம் என்ன!!! வெற்றிக்கனி கண்களுக்கு புலப்படுகிறதா!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment