வார விடுமுறை நாட்களில், அன்பு பாரதம் இலவச
பயிற்சி மையத்தில் மூலமாக, வகுப்புகள் எடுப்பது
வழக்கம்!!!! அதில் TNPSC யின் Group 2A, VAO, Group IV போன்றவற்றிற்கு இலவச பயிற்சி அளித்து
வருகிறோம்!!!
TNPSC தாண்டி,
மற்றைய தேர்வுகளையும் எழுதுங்கள் என்று சொல்வேன்!!! கடந்த
முறை TNPSC Group 2A வந்த போது, PGTRB யும்
வந்தது. அதற்கு பலர் தகுதியிருந்தும்,
அத்தேர்விற்காக தயாராக பலருக்கு விருப்பமில்லை.
அதே போல், கடந்த TRB யில்
வெளிவந்த பாலிடெக்னிக் கல்லூரிக்கான விரிவுரையாளர் தேர்வுக்கு யாருக்கும் விருப்பமில்லை.
பணிக்கொடையும்
அதிகம்; பட்டப்படிப்பு படித்த துறையில் இருந்து
தான் வினாக்கள் வரும். தேர்வுக்கு, B.E மட்டுமே
கல்வி தகுதியாக குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்வாளர்களில், பல பேர், B.E முடித்தவர்கள்.
அதிலும் தமிழ்நாட்டின் பல முண்ணனி கல்வி
நிறுவனங்களில், பட்டப்படிப்பு முடித்தவர்கள். எனக்கு ஒரே ஆச்சரியம்!!!!
இந்த பிரச்சனை….. இக்குறிப்பிட்ட மையத்திற்கான பிரச்சனை/ குறிப்பிட்ட மாணவர்களின் பிரச்சனையாக என்று எண்ண வேண்டாம்.
தமிழ்நாடு முழுவதுமே, இப்பிரச்சனை இருப்பதாகவே உணர்கிறேன். சமூகத்தில் பல நபர்களிடம் உரையாடிய
போது, இப்பிரச்சனையின் வடிவம் புரிந்தது.
கல்வி கட்டமைப்பு, கற்றல் முறை, கற்பித்தல்
முறை, சமூக பார்வை, வாழ்க்கை
புரிதல் என்று கல்வித் துறையில்
பல இடர்பாடுகள் இருப்பதாக தோன்றுகிறது. அதன் வெளிப்பாடாகவே இதனை
புரிந்து கொள்ள முயல்கிறேன். இதற்கு
ஒரு புள்ளியே காரணம் என்று கூற
முடியவில்லை என்றாலும், பல புள்ளிகளின் ஒன்றை
பிரச்சனையாகவே, இப்புறக்கணிப்பை எடுத்து கொள்கிறேன்.
இப்பிரச்சனையின்
உண்மையான ஆழத்தை தெரிந்து கொள்ள
வேண்டுமானால், சமீபத்தில் வெளியான PGTRB தேர்வு முடிவுகளே பார்த்து
கொள்ளலலாம். சுமார் 2000 காலியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட தேர்வில், தகுதி மதிப்பெண் பெற்ற
தேர்வர்களின் சதவீதம் பாத்தால் புரியும்!!!
பள்ளி படிப்பை முடித்த பிறகு,
ஏதேனும் ஒரு துறையை எடுத்து,
இளங்கலையை முடிக்கிறோம். ஆனால், அந்த பாடத்தின்
இருந்து வினாக்கள் கேட்கப்படுமானால், அத்தகைய தேர்விற்கு பின்வாங்கவே
செய்கிறோம். இப்பிரச்சனையை, இரண்டாக பிரித்து ஆய்வு
செய்வது அவசியம். ஒன்று மாணவன் சார்ந்தது;
மற்றொன்று கல்வி துறையை சார்ந்தது;
இப்பிரச்சனையின்
காரணங்களை பட்டியிடுவதில், பல்வேறு சிக்கல்களை உணர்கிறோம்.
ஆனால், இப்பிரச்சனையின் காரணத்தை களைவதே வளமான சமூகத்தின்
தொடக்க புள்ளியாக இருக்கலாம்.
இல்லையென்றால்,
12 வருட பள்ளி பருவ படிப்பு
தவிர்த்து விட்டு, IIT_-JEE, NEET போன்ற தேர்வுகள் வருவது
காலத்தின் கட்டாயமாகி விடுகிறது. இத்தேர்வுகள் திறமையான மாணவனை தேர்ந்தெடுத்து விடுமா???
என்பது மற்றொரு விவாதமே!!!
நடைமுறைக்கும்,
புத்தக புழுவிற்கு இடையேயான இடைவெளியை குறைப்பதன் அவசியத்தை உணர வேண்டி உள்ளது!!!
TNPSC VAO தேர்விற்கு,
ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வரை தான்
கேள்விகள் கேட்கப்படும் என்றாலும், அதற்கு பயிற்சி நிலையங்கள்
செல்ல வேண்டிய நிலையிலே, நாம்
உள்ளோம் என்பதை புரிந்து கொள்ள
வேண்டும்.
எப்போதும்
ஒரு திட்டத்தின் நோக்கம் தோல்வியடைவது, அதன்
நடைமுறைப்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளே!!! அதை
புரிந்து கொள்ளாமல், புதிது புதிதாக திட்டங்கள்
தீட்டுவதில் பயனில்லை!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment