Saturday, February 4, 2017

நாக்கு தான் பிரச்சனையோ???

வடை/பஜ்ஜி/போண்டா ஆகியவற்றில் எண்ணெய் அதிகமாக இருப்பதால், அதன் சுவை கூடுகிறது. எண்ணெய் உடல்நலத்திற்கு கேடு எனவும் தெரிந்தாலும், ஆசை யாரை தான் விட்டது??? மாலை வேளைகளில்..... சூடான வடை/பஜ்ஜியின் சுவையறியவே மனம் விரும்புகிறது.

ஒருபுறம் நாக்கிலிருந்து பிறக்கும் சொற்களால் பிரச்சனை யென்றால், மறுபுறம் சுவை மொட்டுகளும் பிரச்சனையை தான் ஏற்படுத்துகின்றன!!!

சுவை மொட்டுகளை கட்டுபடுத்தினால், உடல் ஆரோக்கியத்தை காக்கலாம். அது போல் சொல் பிறப்பை கட்டுபடுத்தினால், மன ஆரோக்கியத்தை காக்கலாம்.....

ஆனால், மேற்கண்ட இரண்டையும் கட்டுபடுத்துவது என்னவோ, மூளை எனும் பிரதம அமைச்சர் தானே!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment