Monday, February 20, 2017

மருத்துவத்தில் அறிவியலும் பராம்பரியமும்

மனிதனின் ஆயுள்காலம் கூடியிருக்கிறது என்பது கண்கூடான உண்மை. ஆதி காலங்களில், போரினால் மாண்டவர்களே அதிகம்!!! பிறகு உணவு பற்றாக்குறை மற்றும் நோய் தொற்று காரணமாக இறந்தவர்கள் அதிகம்!!! இப்போது உணவு பற்றாக்குறை தீர்ந்து விட்டது. அது போல் தொற்று நோய்களும் குறைந்து விட்டது.

மேற்கண்ட இரண்டையும் அறிவியல் வளர்ச்சியினால் பெற்றவை என்பதில் மாற்று கருத்திற்கு வாய்ப்பில்லை. ஆனால், இன்றைய நிலையில்...... life style disorder எனப்படுகின்ற சர்க்கரை வியாதி, இரத்த கொதிப்பு மற்றும் புற்று நோய் போன்ற நோய்கள் அதிகமாகி வருகின்றன.

மேற்கண்ட நோய்களுக்கு அறிவியல் வளர்ச்சியும் ஒரு காரணமும் என்பதை மறுப்பதற்கில்லை. கால சூழற்சி ஏற்ப, பல நோய்கள் மனிதனை தாக்கி வருகின்றன.

மருத்துவ துறையின் வளர்ச்சியினை, வெளிக்கொணர இருக்கும் பல வழிமுறைகளில் வாழ்நாள் விவரமும் ஒன்றே தவிர!!! வாழ்நாள் விவரம் மட்டும் போதாது!!!

நேற்று... .போரினாலும் உணவு பஞ்சத்தாலும் தொற்று நோய்களாலும் இறந்தான் என்றால், இன்றைய நிலையில்.... . life style disorder நோய்களால் இறக்கிறான். மேலும் மாத்திரையோடு வாழ்க்கையை கழிக்கிறான்.

நேற்றைய செய்தி... இன்றைய வரலாறு!!!
இன்றைய அறிவியல்... நாளைய பராம்பரியம்...

அது போல் நோய்களும், காலத்திற்கு ஏற்ப மாற கூடியது!!!
அறிவியலும் பராம்பரியமும் தண்டவாளங்கள் போன்றது. இரண்டும் ஒன்றாக சேராது: அது போல் இரண்டமில்லாமல்... நோயும் தீராது!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment