கஜாவின் கோர தாண்டவம், சொல்லான துயரினை ஏற்படுத்தி சென்றிருக்கிறது. இதை எங்ஙனம் விவரிப்பது என்று கூட தெரியவில்லை. சொன்னால் கூட, எத்தனை பேர் முழுமையாக தெரிந்து/புரிந்து கொள்வார்கள் என்று கூட யூகிக்க முடியவில்லை.
வாழ்க்கையினை பூஜியத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலை!!! பணக்காரர், எழை என்ற பாகுபாடெல்லாம் இல்லை!!! பணக்காரனுக்கு லட்சங்களில் இழப்பு என்றால், ஏழைகளுக்கு பத்தாயிரங்களில் இழப்பு!!! பலருக்கு வாழ்க்கையே சூன்யமாக தெரிகிறது.
கடந்த பல வருடங்களாகவே…. இந்தியாவே பொருளாதார ரீதியாக சிக்குண்டு இருக்கும் போது, டெல்டா பகுதிவாசிகளின் பொருளாதாரத்தினை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்து சென்றிருக்கிறது,
கஜாவினால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள், மத்திய தர வர்க்கத்தினரே!!! அவர்களே குடிசை வீடுகளை விடுத்து ஒட்டு வீடுகளை, ஆஸ்படாஸ் சீட்டுகளை பயன்படுத்தி வந்தனர். பழைய நிலைமைக்கு திரும்ப 5-10 ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவும் நிச்சயமானதல்ல!!!
மனித உயிர்களின் இழப்பு குறைவு என்பது சற்று ஆறுதலான விஷயம். ஆனால், புயலினை தொடர்ந்த மரணங்கள் அதிகம் என்பது கவனிக்க தக்கது.
மனிதனின் நிலைமையே மோசம் எனும் போது, மிருகங்கள் மற்றும் பறவைகளை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. புயலின் மறுநாள் காலையில், புயலில் தப்பித்து ஒன்றி நின்ற அணில் குஞ்சின் பயம், இன்றும் ரணமாய் மனதில் நிற்கிறது.
அப்படியே தப்பி பிழைத்தாலும், அதற்கு உணவில்லாமல் அல்லாடும் நிலைமையே காணப்படுகிறது. அதிலும் பறவைகளில் நிலைமை இன்னும் மோசம்!!! காகங்களும், அணில்களில் திசையறியாது நிற்கிறது. மாடுகளுக்கு வைக்கோல் இல்லை!!! ஆடுகளுக்கு பசுங் தழைகள் இல்லை!!! எங்களது வீட்டில் கூட, அதற்குள் மூன்று ஆடுகளையும் விற்றாகி விட்டது.
ஒரு தலைமுறையின் உழைப்பான மரங்கள் அனைத்தும் சருகுகளாக மண்ணில் நிற்கின்றன. அதிலும் தென்னை, மா மற்றும் முந்திரி மரங்கள் அதிகம்!!! தென்னையையே நம்பி இருக்கும் விவசாயிகள் எண்ணி பாருங்கள். வேதாரண்யத்தில் அனைத்தும் வீடுகளில், மேற்கண்ட அனைத்திலும் ஒன்றிரண்டு மரமாவது இருக்கும். ஒட்டு மொத்த உபரி வருமானமும் கட்!!! அதனையே முழு வருமான கொண்ட, புஷ்பவனம், பட்டுகோட்டை பகுதிவாசிகளின் நிலையை, சொல்லி தெரியவேண்டியதில்லை!!!
உண்மையிலேயே உணவிற்கு வருந்தும் மக்கள் ஒருபுறம், தேவையான பொருட்கள் ஒருந்தும், இன்னும் அதிகமான பொருட்களை சேர்க்க வேண்டும் என்று எண்ணும் மக்கள் மறுபுறம்!!!!
என்னுடைய தனிப்பட்ட பாதிப்புகள் ஒருபுறம்!!! மொத்த சமூகத்தின் பாதிப்புகள் மறுபுறம்!!!! அரசு ஊழியராக, மருத்துவ பணி ஆற்ற வேண்டிய கடமை மற்றொரு புறம்!!! இப்படியாக ஒய்வற்று நிற்கிறேன் 15 தினங்களாக!!! பல தினங்களில் மதிய உணவை பற்றி யோசித்ததே யில்லை!!!
பல துயரங்களை தாண்டி, அனுபவங்கள் அதிகம்!!!! பலருக்கு பதில் கூட அளிக்க இயவில்லை!!!
கஜா புயலை பாதிக்கப்பட்டவர்களுக்காக, பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் வலு சேர்த்தவர்களுக்கு நன்றிகள் பல!!! கஜா புயலின் போது பணியாற்றிய அனைத்து துறை நண்பர்களின் களப்பணியும் பாராட்டிற்குரியது!!!!
வாழை மரமானது, புயலினால் ஒடிந்தாலும், அது திரும்ப துளிர்த்து வரும் தன்மை உடையது!!!! அந்த மனநிலை, டெல்டா பகுதி வாசிகளுக்கு தேவைப்படுகிறது. இழப்புகள் அதிகம் என்பது உண்மை…. அதை தாண்டியும், அடுத்த அடியை எடுத்து வைப்பது அவசியம்!!!! மனம் உறுதி கொள்வோம்!!! மீட்டு எடுப்போம்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment