கஜா புயல் மொத்த வாழ்வதாரத்தை புரட்டி போட்டாலும், இயற்கை நமக்கு கற்று தந்திருக்கின்ற பாடங்கள் ஏராளம் என்பேன்!!!!
சுயசார்பையும் இயற்கையையும் விட்டு விலகி பல வருடங்களாகி விட்டது. அதை உணர்த்தும் வகையில், இப்புயல் அமைந்தது எனலாம்.
மின்சாரம் இல்லாத நிலையினை, துக்கமாக கருதாமல்…. நம்முடைய தந்தையும் தாத்தாவும் வாழ்ந்த காலத்தினை எண்ணி பார்க்க வேண்டும். மின்சார மோட்டர் இல்லாமல்… கை பம்பின் மூலம் தண்ணீர் அடித்து உபயோகம் செய்ததை புரிய வைத்திருக்கிறது. மிக்சி, கிரைண்டர் இல்லாமல், அம்மி மூலம் அரைத்து காலத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
உடனே…. நான் அறிவியல் சாதனத்தை எதிர்க்கிறேன் என்று எடுத்து கொள்ள வேண்டாம். முழுவதும் அறிவியல் சாதனத்தையே நம்பி… நம்முடைய சுயத்தை இழந்து, செய்வதுறியாது திகைத்து நிற்கிறோம்!?!?! அதை புரிந்து கொள்ள வேண்டும்.
புயல் அடித்து, ஒரு வாரம் கழித்து, திருநாரணயனன் சார், ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார். “நகர் புறங்களில் பால் கிடைப்பதில் பிரச்சனையிருக்கும். ஆனால், கிராம புறங்களில் ஏன் பால் கிடைப்பதில்லை??” என்றார். சற்று சிந்திக்க வைத்த கேள்வி. கிராம புறங்களில் மாடு வளர்க்கும் பழக்கம் முழுவதும் மறைந்து விட்டது. அனைவரும் பால் பாக்கெட்டினை நோக்கி தாவி விட்டனர். எனது வீட்டில் கூட, 10-15 வருடங்களுக்கு முன்னரே வளர்த்த மாடுகளினையே விற்றாயிற்று. இது தான்….. கிராமம் தன்னுடைய சுயத்தை இழந்ததன் எடுத்து காட்டு!!!!
புளூ கலர் டாடா சீட், ஆஸ்பெடஸ் சீட் போன்ற பாதிப்புகளை எற்படுத்தும் பொருட்களை, இப்புயல் மூலம் இயற்கை சற்றே குறைத்திருக்கிறது எனலாம், புத்தம் புதிய மரங்களையும் செடிகளையும் வளர்க்கும் எண்ணத்தை பொது மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை வெள்ளம், உத்ரகாண்ட் வெள்ளம், கேரளா வெள்ளம்……. இப்படியாக பல வெள்ள பாதிப்புகள், பல ஆக்கிரப்புகளை அகற்றியது. அந்த வகையில், கஜா புயல் இயற்கையை புதுப்பித்து கொண்டதாக கூட புரிந்து கொள்ளலலாம்!!!!
” இருக்க இடம், சாப்பிட உணவு, உடுத்த ஆடை…… இதெல்லாம் கிடைக்காம எல்லாரும் கஷ்டப்படுறாங்க……… நீ என்னாடன்னா…. இப்படி கிறுக்கு மாதிரி பேசுற “ நீங்க நினைக்கிறது புரியது……. என்ன பண்றது…. மூளை கிறுக்கு மாதிரி யோசிக்கிதே!!!! (கொஞ்சம் பின் நவீனத்துவமாக யோசித்து பார்த்தேன். அவ்வளவு தான்)
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment