Saturday, December 8, 2018

கஜா புயலும் செல்ல பிராணிகளும்

மனிதனின் பாதிப்புகள் அதிகம் என்றாலும்…… அதை தாண்டி மிருகங்கள் படும் அவஸ்தைகள் அதிகம்!!!!
எனது வீட்டில் இருக்கும் ஆடுகள் மட்டுமே இருக்கிறது. வாயற்ற ஜீவனின் வாயாக(ஆட்டின்) கருத்தை தெரிவிக்கிறேன்.
ஆட்டிற்கு தேவையான பசும்தழைகள் கிடைப்பதில்லை. எங்களது ஊரில் சவுக்கு தழையே ஆடுகளுக்கு அதிகம் பயன்படும், அது முழுவதும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால் உணவிற்கு திண்டாட வைக்கிறது. ஆடுகளினை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கொசு கடியினால், மனிதனே எவ்வாறு தற்காத்து கொள்ள முடியாத நிலையில், ஆடுகளின் நிலை சொல்லி மாளாது!!!!
தினமும் 3 கொசுவர்த்தி சுருள் கொசு அடிக்கும் பேட்……. இவ்வாறாக பல யுத்திகளை பயன்படுத்தியும் பிரயோஜனமில்லை!!!! ஆடுகள் படுத்து உறங்குவதும் கிடையாது!!! பரிதாப நிலையே மிஞ்சுகிறது!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment