ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை முறையும், இடதுசாரி சிந்தனையாக ஆரம்பித்து, வலதுசாரி சிந்தனை முடிவதாக நினைக்கிறோம்... ஆனால், எல்லா சிந்தனைகளையும் அப்படியாக நடப்பதில்லை...
பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை என்பது, இளைஞர்களிடம் குறைவாகவே காணப்படும். இந்த மாதிரியான இடது சாரி சிந்தனைகள், கால போக்கில் வலது சாரியாக மாறி, கடவுள் நம்பிக்கை உ ள்ள மனிதனாக இறக்கிறான்.
இந்த விஷயத்தில், தன் மீதான நம்பிக்கை குறைந்து, கடவுள் மீதான நம்பிக்கை அதிகமாகும் போது, . வலதுசாரி சிந்தனை அதிகமாகுவது போல் தோன்றமளிக்கிறது.
சில சிந்தனைகள், காலத்தினால் மழங்கடிப்பட்டு, இடது சாரி சிந்தனைகள், வலது சாரி சிந்தனையாக மாற்றம் அடைகிறது.
என்னுடைய சம காலத்தில், காதல் திருமணம் என்பது பண்பாட்டு ரீதியாக தவறில்லை என்ற நிலையில் உள்ளது. இந்த சிந்தனை, என் வாழ்நாள் முழுவது்ம் மாறாது.
ஆனால், அடுத்த தலைமுறையில் காதல் திருமணங்கள் மறைந்து லிவிங் டூகதர் என்ற வாழ்க்கை முறை, சமுதாயத்தினால் முன்னெடுக்கப்படலாம். அப்போது, காதல் திருமணம் என்பது வலது சாரி சிந்தனையாக மாறி இருக்கலாம்.
சில நேரங்களில், சிந்தனைகள் மாறுவது போல் தோன்றமளிக்கிறது. சில நேரங்களில், உண்மையாகவே சிந்தனைகள் மாற்றம் அடைகின்றன. அனைத்தினையும் காலமும் சூழ்நிலையும் முடிவுச் செய்கின்றன.
-----------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------
உங்கள் புரிதலுக்காக:: இடது சாரி சிந்தனை என்பது மாற்றம் (புதுமைவாதிகள்)வேண்டும் என்பவர்கள்...
வலது சாரி சிந்தனை என்பது மாற்றம் வேண்டாம்(பழைமைவாதிகள்). பழைய நிலையே தொடரலாம்.
உங்களில் ஒருவன்’
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment